காசோலை உபயோகித்தல்

அறிந்து கொள்வோம்: காசோலை உபயோகித்தல் :
ஒருவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது நிறுவனமோ மற்றொருவருக்கு காசோலை வழங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனென்றால் காசோலை பணமாகாமல் வங்கியினரால் திருப்பி அனுப்பினால் அது கிரிமினல் குற்றமாக கருதி உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும்.
எந்த சூழ்நிலையிலும் காசோலையில் பெயர் எழுதாமலோ, தேதி குறிப்பிடாமலோ அல்லது தொகை எழுதாமலோ வழங்குதல் கூடாது. ஏனென்றால் காசோலை பெருபவர் அதை எவ்வாறு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அவ்வாறு தவறாக உபயோகப்படுத்தும் போது காசோலையில் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் நீங்கள் பொருப்பாவிர்கள்.
கடன் பெருபவர்கள் காசோலையை பினையமாக கொடுக்கும் தருணத்தில் காசோலை பற்றிய முழு விபரத்தினையும் அதை உபயோகிக்கும் முறையையும் மற்றும் தொகையின் உச்சவரம்பு ஆகியவற்றினையும் தொகுத்து காசோலை பெருபவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறுதல் அவசியம். ஆனால் பெரும்பாலானவர்கள் இம்முறையினை பின்பற்றுவதில்லை.
பணத்தின் தேவை மற்றும் அவசரம் கருதி காசோலையின் பெறுப்பு பற்றிய முழு விபரமும் தெரியாமல் கொடுத்து விடுகின்றனர். பணத்தை திரும்பப் பெரும் பொருட்டு மற்றும் அதிக வட்டி வசூல் செய்யும் பொருட்டு ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிக தொகையினை காசோலையில் எழுதி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
காசோலையை வழங்கிவிட்டு பின்னர் முன் அறிவிப்பின்றி உரிய காரணம் இன்றி காசோலை வங்கியனரால் நிறுத்தம் செய்ததும் குற்றமாக கருதப்படும்.
எனவே காசோலை உபயோகிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.