மக்களுக்கு தெரியாத சில முக்கியமான சட்ட பிரிவுகள்

மக்களுக்கு தெரியாத சில முக்கியமான சட்ட பிரிவுகள் :


1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்....!!

நாம் அனைவரும் வக்கீல்கள் அல்ல, மேலும் நமது கல்வியில் அடிப்படை சட்டமும் இல்லை. பிறகு எப்படி ஓர் சாமானிய இந்தியன் தனக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். முதலில் ஆறாம் வகுப்பில் இருந்தாவது அடிப்படை சட்டத்தை கட்டாய கல்வியாக்க வேண்டும்.
அடிப்படை சட்டம் தெரியாததால் தான், மளிகை கடையில் இருந்து சாலை தெரு முனைகள் வரை பல இடங்களில் நாம் நமக்கு தெரியாமலேயே ஏமார்ந்து வருகிறோம். எம்.ஆர்.பி என்பது அதிகபட்ச விலை தான், அதற்கு கீழே விலை பேரம் பேசி பொருளை வாங்கலாம் என்ற சட்டம் இருக்கிறது.
இது போன்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் சிலவன இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்..
* பெண் கைது
பொழுது சாய்ந்த பிறகு அல்லது விடியலுக்கு முன் பெண்ணை கைது செய்ய போலிசுக்கு அதிகாரம் இல்லை.
* பெண் விசாரணை
பெண் ஒருவரை வெறும் கேள்வி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றில்லை. அவரது வீட்டிலேயே விசாரணை செய்யலாம்.
* வருமானத் துறை அதிகாரி
நீங்கள் செய்த தவறின் அளவு அல்லது தீவரத்தை சார்ந்து வருமான துறை அதிகாரி உங்களை கைது செய்யவும், விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கிறது.
* போக்குவரத்து சட்டம்
சைக்கிள், ரிக்ஷா போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களுக்கு போக்குவரத்து சட்டங்கள் பொருந்தாது.
* அபராதம்
உங்களிடம் தகுந்த ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டி அபராதம் கட்டியிருந்தால், அந்த நாளில் நீங்கள் மீண்டும் வேறு எங்கும், வேறு போலீசிடம் அபராதம் கட்ட தேவையில்லை. ஆனால், மறுநாள் இது செல்லாது, அதற்குள் ஆவணங்களை சரி செய்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் வாகனம் ஓட்டக் கூடாது.
* அபராதம்
இது மது அருந்தி வாகனம் ஒட்டுவோருக்கு பொருந்தாது. ஒருமுறை மது அருந்தி நீங்கள் வாகனம் ஒட்டி இருந்தால், அதே போதையுடன் மீண்டும் ஓட்டக் கூடாது. மீறினால் மீண்டும் அபராதம் / தண்டனை விதிக்கப்படும்.
* எம்.ஆர்.பி
எம்.ஆர். பி என்பது அதிகபட்ச விற்பனை விலை, ஆதலால் நீங்கள் விலை குறைத்து கேட்டும் பொருள் வாங்கலாம். ஆனால், அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விற்க விற்பனையாளருக்கு உரிமை இல்லை.
* தலைமை கான்ஸ்டபிள் அதிகாரம்
நூறு ரூபாய்க்கு மேலான அபராதத்தை விதிக்க தலைமை கான்ஸ்டபிள்-க்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தவறுகள் செய்து சிக்கியிருந்தால் அபராத சீட்டை கொடுத்து அபராதம் கட்ட சொல்லலாம் என கூறப்படுகிறது.
* தத்தெடுக்கும் சட்டம்
உங்களுக்கு ஒரு மகன் இருந்தால், நீங்கள் மற்றொரு பிள்ளையை தத்தெடுக்க முடியாது என இந்து தத்தெடுக்கும் சட்டத்தில் (Hindu Adoptions and Maintenance Act, 1956.) குறிப்பிடப்பட்டுள்ளது.
* தத்தெடுக்கும் சட்டம்
இந்தியாவில் தனி ஆண், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
* அலைபேசி பதிவுகள்
அலைபேசியில் பேசிய பதிவுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு நீதிபதி தீர்ப்பளிக்கலாம்.
* விவாகரத்து
ஒரு வருடம் கூட முடிவடையாமல் தம்பதி விவாகரத்து கோர முடியாது. ஒருவேளை பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருந்தால், அல்லது கட்டாயப்படுத்து திருமணம் செய்து வைத்திருந்தால் இது பொருந்தாது, அவர்கள் விவாகரத்து கோரலாம்.
* குடிநீர்
எந்த விடுதியிலும், ஹோட்டலிலும் குடி நீருக்கும், கழிவறையும் பயன்படுத்தவும் தடுக்கவும் முடியாது, அதற்கு பணம் வசூலிக்கவும் கூடாது.
* குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல்
குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய நபர் சுவாசிக்கும் கருவியில் உபயோகிக்க மறுப்பு தெரிவித்தால் எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யும் உரிமை போலிசுக்கு இருக்கிறது.
* பாலியல் வன்முறை
பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணுக்கு இலவசமாக மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
* கர்ப்பம் சட்டம்
கர்ப்பமான இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது.
* ஹோட்டல் சட்டம்
எந்த ஒரு ஹோட்டலும் பதின் வயதை கடந்த, திருமணமாகாத ஜோடிக்கு அறை வழங்க முடியாது என நிராகரிக்க முடியாது.
இந்தியச்சட்டம்

சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் என்னசெய்வது

நான் எனது சொத்துக்களை எனது வாரிசுகளுக்கு எழுதிவைக்க விரும்புகிறேன். ஆனால் சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் அதை வாங்கி கொண்டு என்னை கண்டுகொள்ளாமல் அனாதையாக விட்டுவிட்டால் என்னசெய்வது. இதற்கு சட்டத்தில் பாதுகாப்பு உண்டா???


பெற்றோர் மற்றும் ழூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் – 2007 பிரிவு 23 - ன் படி நீங்கள் உங்கள் சொத்தை வாரிசுகளுக்கு எழுதி வைக்கும் போது அதில் சொத்தை பெறுபவர் பெற்றோருக்கு உதவிகளையும் ஆரோக்கியம் ரீதியாக செய்ய வேண்டிய தேவைகளையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையிட்டு எழுதி வைத்தால், நீங்கள் சொத்தை எழுதி வைத்த பின் சொத்தை பெறுபவர் உங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் அந்த சொத்து மோசடியாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ பெறப்பட்டதாக கருதப்படும். அச்சுழ்நிலையில் எழுதிவைத்த சொத்து மற்றும் உரிமை மாற்றம் சட்டப்படி செல்லாமல் ஆகிவிடும்.

நீதிமன்றகளில் விரைவாக நீதி கிடைக்க என்ன வழி?

நீதிமன்றகளில் வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்க அதிக காலம் ஆகிறது. சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமலும் போகிறது. எனவே விரைவாக நீதி கிடைக்க என்ன வழி? உன்மைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது???


இந்திய அரசியல் அமைப்பு சட்டப் படியும், இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையினாலும், குற்ற செயல்களின் என்ணிக்கையாலும், நீதி மன்றங்களில் நேரடியாக தொடரப்படும் பலதரப்பட்ட வழக்குகளின் என்ணிக்கையாலும் அனைத்து வழக்குகலுக்கும் உடனடியாக நீதிமன்ற தீர்ப்பு கிடைக்காமல் போவதும் அதற்காக சிறிது காலம் காத்திருப்பதும் தவிற்க இயலாதது. இருந்த போதிலும் அரசு பலதரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பல சட்ட திருத்தங்களை கொன்டுவந்து வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துக் கொன்டுதான் இருக்கிறது.
உதாரணமாக, லோக் அதாலத்தின், கிரிமினல் வழக்குகலுக்கான விரைவு நீதிமன்றங்கல், முக்கிய வழக்குகலுக்கான தனி மற்றும் சிறப்பு நீதிமன்றங்கல், குழந்தைகள் மற்றும் பென்களுக்கான தனி நீதி மன்றங்கல், வியத்துக்கான இழப்பீடு, நுகர்வோர் குறைபாடுகள், கடன் வசூலித்தல் மற்றும் பலதரப்பட்ட வழக்குகலுக்கு தனிப்பிரிவு நீதி மன்றங்கல் நடைமுறையில் உள்ளன.
இருந்த போதிலும் நீதி மன்றங்கலில் வழக்கு பதிவு செய்ய ஆகும் காலம், பதிவிற்கு பின்னால் விசாரனை நடைமுறைகள், வழக்கின் எதிராலிக்கு வழங்கப்படும் நேரம் மற்றும் வாய்ப்பு, நீதி மன்ற தீர்ப்பிற்கு பின்னால் பின்பற்றப்படும் வழிமுறைகள், நீதிமன்றங்கலில் நீதி அரசர்களின் என்னிக்கை குறைவு என பல காரனங்கலாலும் வழக்கு தாமதம் ஆகும் நிலையை நாம் எற்றுக்கொள்ளத்தான் வேன்டும்.
நீதிமன்றங்கலுக்கு தேவை சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள். அதனை முறையாக மற்றும் சரியான நேரத்தில் சமர்பிக்க தவரும் பட்சத்தில் சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் மறு சீறாய்வு மற்றும் மேல் முறையீடு போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் வரை செல்லும்

வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டுமா?? கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் வரை செல்லும்???


சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 105 – வது படி ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட குத்தகைகள் அல்லது வாடகைகள், வருடா வருடம் புதுப்பிக்கும் குத்தகைகள், வருடாந்திர வாடகையை முன்னரே பெற்றுக் கொள்ளும் குத்தகைகள் போன்ற ஒப்பந்தப் பத்திரத்தை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் எழுதி ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறிர்களோ அவ்வளவு காலம் வரை செல்லும். அதிக பட்சமாக 36 மாதங்கள் வரை நில கிரைய ஒப்பந்தம் போடலாம் என சட்டம் அனுமதிக்கிறது.

நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.

ஒரு வருடம் முன்பு நிலத்தை விற்பதற்காக ஒருவருடன் கிரைய ஒப்பந்தப் பத்திரம் எழுதி முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்தோம். ஆனால் நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.


எனவே நாங்கள் வேறு ஒருவருக்கு நிலத்தை விற்கும் போது வில்லங்கச் சான்றிதழில் பழைய கிரய ஒப்பந்தப் பத்திரம் பற்றிய தகவல் வருகிறது. அதை நாங்கள் தனியாக ரத்து செய்ய முடியுமா? அல்லது எவ்வாறு ரத்து செய்வது???
பவர் பத்திரத்திற்கு மட்டும் தான் பவர் கொடுத்த நபர் ரத்து செய்யும் உரிமையை சட்டம் தருகிறது. எனவே நீங்கள் வழக்கறிஞர் மூலம் உரிய நீதிமன்றத்தில் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து தரும்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்று அதன் நகலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்தால் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரம் சட்டப்படி ரத்தாகி விடும். அதன் பின்னிட்டு வரும் வில்லங்க சான்றிதழில் கிரயப ஒப்பந்தப் பத்திரம் ரத்து என்று பதிவாகி வரும்.

புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்?

எந்த விதமான வழக்குகளில் புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்? மேலும் பொதுமக்கள் எல்லா விதமான புகார்கள் மற்றும் வழக்குகளை காவல் துறையினரிடம் இருந்தோ அல்லது நீதிமன்றத்தில் இருந்தோ திரும்ப பெற முடியுமா???


கொலை, கொள்ளை, மத சம்மந்தமான செயல் பாடுகள், விபத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டம் கூட்டுதல், கள்ள நாணயம், போதை பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை, கலாச்சார சீர்கேட்டுச் செயல்பாடுகள், பொதுமக்கள் சுகாதாரம், பாதுகாப்பு, ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்றம் மற்றும் அரசு ஆனையை அவமதிக்கும் மற்றும் மீறிய செயல்பாடுகள் மற்றும் பல செயல்பாடுகளுக்கு காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
பொதுமக்கள் காவல் துறையினரிடமிடம் அளிக்கும் புகார்களையும் மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற முடியும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. ஆனால் தற்சமயம் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிக்கையின் படி நீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள பொது நல வழக்கினை மனுதாரர் திரும்ப பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்

முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அது சட்டப்படி கணவன் மனைவி உறவாக கருதப்படுமா??
18 வயது பூர்த்தி அடைந்த ஆணும் பெண்ணும் இதற்கு முன்னால் வேறு எவர் ஒருவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் அல்லது திருமணத்திற்கு பிறகு முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் இருவரும் சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தால் அது சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவி உறவாகவே கருதப்படும். மேலும் அரசு பதிவேட்டில் பதிவு செய்தால் மட்டுமே கணவன் மனைவி என்கின்ற உறவு என்றில்லாமல் இருவரின் உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் கலாச்சார சடங்குகள் போன்றவற்றை வைத்தும் கணவன் மனைவி என்கிற உறவாக நீதிமன்றங்களில் கருதப்படும்.

உயில் நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை மாற்ற முடியும்

ஒருவரின் பெயரில் உயில் இருந்தும் அவர் அதை நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை அவர் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறுகிறார்களே அது ஏன்??

இந்தியாவில் சார்டர்டு சிட்டீஸ் (CHARTERED CITIES) என்றழைக்கப்படும் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களின் வரையறைக்குள் சொத்து இருந்தாலோ அல்லது உயில் எழுதியவர் அந்த நகரில் வசித்திருந்தாலோ உயில் எழுதியவர் இறந்த பின் உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னரே வாரிசுதாரர் சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்ய முடியும். இதை தவிர மற்ற இடங்களில் சொத்து இருந்தாலோ அல்லது உயிலை எழுதியவர் வசித்திருந்தாலோ நீதிமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை. நேரடியாக வாரிசுதாரர் உயிலை வைத்து சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி அபராதம் வசூலிக்கின்றனர்

'சட்டம் - ஒழுங்கு போலீஸார் சிலர் சிறிய சாலைகள், தெருக்களில் நின்றுகொண்டு ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி அபராதம் வசூலிக்கின்றனர். இது முற்றிலும் தவறான நடவடிக்கை.

'வெள்ளை சட்டை' அணிந்திருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு மட்டும்தான் அபராதம் வசூலிக்கும் உரிமை உள்ளது. அவரிடம்தான் அபராதம் வசூலித்ததற்கு கொடுக்கப்படும் ரசீது புத்தகம் இருக்கும்.

சட்டம் - ஒழுங்கை சரிசெய்யும் காக்கி சட்டை போலீஸாருக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிடும் அதிகாரம் மட்டும்தான் இருக்கிறது. அபராதம் வசூலிக்க அதிகாரம் கிடையாது.

ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை காக்கி சட்டை போலீஸார் பிடித்தாலும், அருகே இருக்கும் போக்குவரத்து போலீஸாரிடம்தான் அந்த நபரை ஒப்படைக்க வேண்டும்.

காக்கி சட்டை அணிந்திருக்கும் போலீஸார் யாராவது அபராதம் வசூலித்தால், அந்த மாதிரியான வசூல் ராஜாக்களை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள்

வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு ஜீவனாம்சம் பெற முடியுமா?

படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா??
ஜீவனாம்சம் என்பது விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான செலவினங்களுக்காக கணவரிடமிருந்து பெற்று தருவது. அன்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விவாகரத்து வழக்கின் தீர்ப்பில் படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் அவர்கள் சுயமாக சம்பாதிக்க முடியும் சூழ்நிலையில் இருப்பதால் ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் பெண்ணிற்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்கு கணவரிடமிருந்து இழப்பீட்டு பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால்

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால் காவல் நிலையத்தில் புகார் செய்தால் இது குடும்ப பிரச்சனை என்று புகாரை ஏற்க மறுத்தால் எங்கு சென்று புகார் செய்வது?


மனைவியை கணவரோ அல்லது அவரது உறவினர்களோ சேர்ந்து கொண்டு கொடுமை படுத்தினால் அது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498 பிரிவு “அ” (கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் பெண்ணை கொடுமை படுத்துதல்) கீழ் கிரிமினல் குற்றமாகும். ஆனால் அன்மையில் உச்சநீதிமன்றம் குடும்ப பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய கூடாது என்றும் அவ்வாறு வழக்கு பதிவு செய்தாலும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட கூடாது என்றும் வழியுறுத்தியுள்ளது. எனவே இது போன்ற பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை நேரடியாக குற்றவியல் நீதிமன்றத்தில் DOMESTIC VIOLENCE ACT – 2005 படி சம்மந்தப்பட்டவர்களின் மேல் வழக்கு தொடர முடியும்.