திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்

முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அது சட்டப்படி கணவன் மனைவி உறவாக கருதப்படுமா??
18 வயது பூர்த்தி அடைந்த ஆணும் பெண்ணும் இதற்கு முன்னால் வேறு எவர் ஒருவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் அல்லது திருமணத்திற்கு பிறகு முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் இருவரும் சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தால் அது சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவி உறவாகவே கருதப்படும். மேலும் அரசு பதிவேட்டில் பதிவு செய்தால் மட்டுமே கணவன் மனைவி என்கின்ற உறவு என்றில்லாமல் இருவரின் உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் கலாச்சார சடங்குகள் போன்றவற்றை வைத்தும் கணவன் மனைவி என்கிற உறவாக நீதிமன்றங்களில் கருதப்படும்.