நீதிமன்றகளில் விரைவாக நீதி கிடைக்க என்ன வழி?

நீதிமன்றகளில் வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்க அதிக காலம் ஆகிறது. சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமலும் போகிறது. எனவே விரைவாக நீதி கிடைக்க என்ன வழி? உன்மைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது???


இந்திய அரசியல் அமைப்பு சட்டப் படியும், இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையினாலும், குற்ற செயல்களின் என்ணிக்கையாலும், நீதி மன்றங்களில் நேரடியாக தொடரப்படும் பலதரப்பட்ட வழக்குகளின் என்ணிக்கையாலும் அனைத்து வழக்குகலுக்கும் உடனடியாக நீதிமன்ற தீர்ப்பு கிடைக்காமல் போவதும் அதற்காக சிறிது காலம் காத்திருப்பதும் தவிற்க இயலாதது. இருந்த போதிலும் அரசு பலதரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பல சட்ட திருத்தங்களை கொன்டுவந்து வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துக் கொன்டுதான் இருக்கிறது.
உதாரணமாக, லோக் அதாலத்தின், கிரிமினல் வழக்குகலுக்கான விரைவு நீதிமன்றங்கல், முக்கிய வழக்குகலுக்கான தனி மற்றும் சிறப்பு நீதிமன்றங்கல், குழந்தைகள் மற்றும் பென்களுக்கான தனி நீதி மன்றங்கல், வியத்துக்கான இழப்பீடு, நுகர்வோர் குறைபாடுகள், கடன் வசூலித்தல் மற்றும் பலதரப்பட்ட வழக்குகலுக்கு தனிப்பிரிவு நீதி மன்றங்கல் நடைமுறையில் உள்ளன.
இருந்த போதிலும் நீதி மன்றங்கலில் வழக்கு பதிவு செய்ய ஆகும் காலம், பதிவிற்கு பின்னால் விசாரனை நடைமுறைகள், வழக்கின் எதிராலிக்கு வழங்கப்படும் நேரம் மற்றும் வாய்ப்பு, நீதி மன்ற தீர்ப்பிற்கு பின்னால் பின்பற்றப்படும் வழிமுறைகள், நீதிமன்றங்கலில் நீதி அரசர்களின் என்னிக்கை குறைவு என பல காரனங்கலாலும் வழக்கு தாமதம் ஆகும் நிலையை நாம் எற்றுக்கொள்ளத்தான் வேன்டும்.
நீதிமன்றங்கலுக்கு தேவை சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள். அதனை முறையாக மற்றும் சரியான நேரத்தில் சமர்பிக்க தவரும் பட்சத்தில் சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் மறு சீறாய்வு மற்றும் மேல் முறையீடு போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.