ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்....!!

நாம் அனைவரும் வக்கீல்கள் அல்ல, மேலும் நமது கல்வியில் அடிப்படை சட்டமும் இல்லை. பிறகு எப்படி ஓர் சாமானிய இந்தியன் தனக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். முதலில் ஆறாம் வகுப்பில் இருந்தாவது அடிப்படை சட்டத்தை கட்டாய கல்வியாக்க வேண்டும்.
அடிப்படை சட்டம் தெரியாததால் தான், மளிகை கடையில் இருந்து சாலை தெரு முனைகள் வரை பல இடங்களில் நாம் நமக்கு தெரியாமலேயே ஏமார்ந்து வருகிறோம். எம்.ஆர்.பி என்பது அதிகபட்ச விலை தான், அதற்கு கீழே விலை பேரம் பேசி பொருளை வாங்கலாம் என்ற சட்டம் இருக்கிறது.
இது போன்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் சிலவன இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்..
* பெண் கைது
பொழுது சாய்ந்த பிறகு அல்லது விடியலுக்கு முன் பெண்ணை கைது செய்ய போலிசுக்கு அதிகாரம் இல்லை.
* பெண் விசாரணை
பெண் ஒருவரை வெறும் கேள்வி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றில்லை. அவரது வீட்டிலேயே விசாரணை செய்யலாம்.
* வருமானத் துறை அதிகாரி
நீங்கள் செய்த தவறின் அளவு அல்லது தீவரத்தை சார்ந்து வருமான துறை அதிகாரி உங்களை கைது செய்யவும், விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கிறது.
* போக்குவரத்து சட்டம்
சைக்கிள், ரிக்ஷா போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களுக்கு போக்குவரத்து சட்டங்கள் பொருந்தாது.
* அபராதம்
உங்களிடம் தகுந்த ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டி அபராதம் கட்டியிருந்தால், அந்த நாளில் நீங்கள் மீண்டும் வேறு எங்கும், வேறு போலீசிடம் அபராதம் கட்ட தேவையில்லை. ஆனால், மறுநாள் இது செல்லாது, அதற்குள் ஆவணங்களை சரி செய்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் வாகனம் ஓட்டக் கூடாது.
* அபராதம்
இது மது அருந்தி வாகனம் ஒட்டுவோருக்கு பொருந்தாது. ஒருமுறை மது அருந்தி நீங்கள் வாகனம் ஒட்டி இருந்தால், அதே போதையுடன் மீண்டும் ஓட்டக் கூடாது. மீறினால் மீண்டும் அபராதம் / தண்டனை விதிக்கப்படும்.
* எம்.ஆர்.பி
எம்.ஆர். பி என்பது அதிகபட்ச விற்பனை விலை, ஆதலால் நீங்கள் விலை குறைத்து கேட்டும் பொருள் வாங்கலாம். ஆனால், அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விற்க விற்பனையாளருக்கு உரிமை இல்லை.
* தலைமை கான்ஸ்டபிள் அதிகாரம்
நூறு ரூபாய்க்கு மேலான அபராதத்தை விதிக்க தலைமை கான்ஸ்டபிள்-க்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தவறுகள் செய்து சிக்கியிருந்தால் அபராத சீட்டை கொடுத்து அபராதம் கட்ட சொல்லலாம் என கூறப்படுகிறது.
* தத்தெடுக்கும் சட்டம்
உங்களுக்கு ஒரு மகன் இருந்தால், நீங்கள் மற்றொரு பிள்ளையை தத்தெடுக்க முடியாது என இந்து தத்தெடுக்கும் சட்டத்தில் (Hindu Adoptions and Maintenance Act, 1956.) குறிப்பிடப்பட்டுள்ளது.
* தத்தெடுக்கும் சட்டம்
இந்தியாவில் தனி ஆண், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
* அலைபேசி பதிவுகள்
அலைபேசியில் பேசிய பதிவுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு நீதிபதி தீர்ப்பளிக்கலாம்.
* விவாகரத்து
ஒரு வருடம் கூட முடிவடையாமல் தம்பதி விவாகரத்து கோர முடியாது. ஒருவேளை பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருந்தால், அல்லது கட்டாயப்படுத்து திருமணம் செய்து வைத்திருந்தால் இது பொருந்தாது, அவர்கள் விவாகரத்து கோரலாம்.
* குடிநீர்
எந்த விடுதியிலும், ஹோட்டலிலும் குடி நீருக்கும், கழிவறையும் பயன்படுத்தவும் தடுக்கவும் முடியாது, அதற்கு பணம் வசூலிக்கவும் கூடாது.
* குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல்
குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய நபர் சுவாசிக்கும் கருவியில் உபயோகிக்க மறுப்பு தெரிவித்தால் எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யும் உரிமை போலிசுக்கு இருக்கிறது.
* பாலியல் வன்முறை
பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணுக்கு இலவசமாக மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
* கர்ப்பம் சட்டம்
கர்ப்பமான இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது.
* ஹோட்டல் சட்டம்
எந்த ஒரு ஹோட்டலும் பதின் வயதை கடந்த, திருமணமாகாத ஜோடிக்கு அறை வழங்க முடியாது என நிராகரிக்க முடியாது.
இந்தியச்சட்டம்