வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு ஜீவனாம்சம் பெற முடியுமா?

படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா??
ஜீவனாம்சம் என்பது விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான செலவினங்களுக்காக கணவரிடமிருந்து பெற்று தருவது. அன்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விவாகரத்து வழக்கின் தீர்ப்பில் படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் அவர்கள் சுயமாக சம்பாதிக்க முடியும் சூழ்நிலையில் இருப்பதால் ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் பெண்ணிற்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்கு கணவரிடமிருந்து இழப்பீட்டு பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.