உறவினர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டால்

திருமணத்திற்கு பிறகு மனைவி கணவரிடமோ அல்லது கணவர் மனைவியிடமோ தன் சுய முடிவால் அல்லது உறவினர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டால் சேர்ந்து வாழ விரும்புவோர் எங்கு சென்று புகார் செய்வது??


திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் இது போன்று பாதிக்கப்படும் மனைவியோ அல்லது கணவரோ நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று கூறி குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இருவரையும் அழைத்து கலந்தாய்வினை மேற்கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வழிவகை செய்யும்.