புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்?

எந்த விதமான வழக்குகளில் புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்? மேலும் பொதுமக்கள் எல்லா விதமான புகார்கள் மற்றும் வழக்குகளை காவல் துறையினரிடம் இருந்தோ அல்லது நீதிமன்றத்தில் இருந்தோ திரும்ப பெற முடியுமா???


கொலை, கொள்ளை, மத சம்மந்தமான செயல் பாடுகள், விபத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டம் கூட்டுதல், கள்ள நாணயம், போதை பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை, கலாச்சார சீர்கேட்டுச் செயல்பாடுகள், பொதுமக்கள் சுகாதாரம், பாதுகாப்பு, ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்றம் மற்றும் அரசு ஆனையை அவமதிக்கும் மற்றும் மீறிய செயல்பாடுகள் மற்றும் பல செயல்பாடுகளுக்கு காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
பொதுமக்கள் காவல் துறையினரிடமிடம் அளிக்கும் புகார்களையும் மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற முடியும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. ஆனால் தற்சமயம் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிக்கையின் படி நீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள பொது நல வழக்கினை மனுதாரர் திரும்ப பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.